Wednesday, March 6, 2024

இறப்பதற்கு முன் விடுதலை செய்யுங்கள்

 


சக்கர நாற்காலியில் வாழும் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சிலரை மோடி அரசு போட்ட ஆள்தூக்கிச் சட்டமான UAPA சட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ள உச்ச நீதிமன்றத்துக்கு இன்னொரு வேண்டுகோள்.

தரங்கெட்ட மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளப்பட்ட பிமா கொரேகான் வழக்கின் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் அவர்கள் இறப்பதற்கு முன்பாக விடுதலை செய்யவும்.

ஒரு பிரதமரை கொல்ல முயற்சி என்றால் அவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வாங்கித்தர வேண்டும். ஆனால் இந்த வழக்கை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதுவே மோடி அரசு போட்டது அயோக்கியத்தனமான பொய் வழக்கு என்பதன் சான்று.

ஸ்டான் சுவாமி போல இல்லாமல் மற்றவர்களாவது இறப்பதற்கு முன்பு விடுதலை செய்யவும்.


No comments:

Post a Comment