Wednesday, July 6, 2022

பட்டியல் போட்டீரா மாலன்?


கடந்த ஆண்டு திரு இமையம் அவர்களின் “செல்லாத பணம்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்த போது மூத்த்த்த்த்த மாலன் ஒரு பதிவு எழுதினார்.

அந்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கு வந்த நூல்களின் பட்டியலை வெளியிட்டு “நீங்கள் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் எந்த நூலை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?” என்று ஒரு விஷமத்தனமான வேலை செய்தார்.

அப்போது எழுதிய பதிவு இங்கே உள்ளது.

வெட்கமே இல்லையா மாலன்? 


இப்போது அவரே மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளார். இந்த பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான நூல்களின் பட்டியலை மாலன் வெளியிட்டாரா? அப்போதுதானே இவரது நூலை விட சிறந்த, தகுதியான நூல் ஏதாவது இருந்ததா இல்லையா என்று சொல்ல முடியும்!

 இமையத்திற்கு இவர் கடைபிடித்த வரையறை இவருக்கும் பொருந்தும்தானே!

 பிறருடைய பதிவுகளில் வந்து செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் மாலன் தன் பக்கத்தை மட்டும் பூட்டி வைத்துள்ளார்.

 அப்படி அவர் ஏதாவது பட்டியல் போட்டாரா என்பதை அவர் பக்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டசாலிகள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.

 அப்படி எதுவும் இல்லையென்றால் அதுவும் மாலன் ஒரு கீழ்த்தரமான மனிதர் என்பதற்கான இன்னொரு சான்று. 

1 comment:

  1. Shared this post in Whatsapp without your approval....please excuse me,
    Aim is others to understand that he got this MP due to his earlier praising and comparison with Dr. Ambedkar not because of .....his achievement in musical

    ReplyDelete