Tuesday, July 5, 2022

மோடி கம்மிங். தியாகிகள் உஷார்

 


காலையில் கண்ணில் பட்ட படம் முதலில் உள்ளது. ஆந்திராவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை மோடி வணங்குகிறாராம்.

விடுதலைப் போரைக் காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தின் வாரிசு, விடுதலை வரலாற்றை மாற்றி எழுதும் மோசடிப் பேர்வழி, சுதந்திரத்தின் விழுமியங்களை சிதைக்கும் கொலைகாரன், இந்திய செல்வத்தை விற்கும் தரகன் மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது!

தியாகிகளே எச்சரிக்கையாக இருப்பீர்!

நாடாளுமன்ற கட்டிடத்தை முத்தமிட்ட மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் சீரழித்த குற்றவாளி.

உங்களை வணங்கும் கரங்களுக்குள் கொலை வாள் ஒளிந்திருக்கும். எச்சரிக்கையாக இருப்பீர். உங்கள் பென்ஷனைக் கூட அந்த படுபாவி பறிக்கலாம். உங்களை காட்டிக் கொடுத்த கருங்காலி எவனாவது இருந்தால் அவனுக்கும் தியாகி அடையாளி கொடுக்கலாம்.

எலிசபெத் ராணியின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த துரோகி கோழை சாவர்க்கரை வீரன் என்று அழைப்பவர்கள் அல்லவா இவர்கள்!

No comments:

Post a Comment