Tuesday, April 8, 2014

பாண்டிய நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி



ஆயிரம் பொற்காசு கொடுத்து தீர்த்து வைக்கப்பட்டது பாண்டிய நாட்டு மன்னனுக்கு வந்த வினோதமான சந்தேகம். தருமியின் துயரம் நீங்க ஆயிரம் பொற்காசுக்கள் கிடைத்தது. அதற்காக சிவபெருமான் நக்கீரனோடு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

மதுரை இருக்கிறது. ஆனால் பாண்டிய மன்னன் இப்போது இல்லை. நக்கீரன் இல்லை. ஆனால் நெஞ்சம் முழுக்க துயரோடு தருமிக்கள் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுக்கள் பெற்றுத் தர சிவ பெருமான் இதுவரை வரவில்லை.

பாண்டிய மன்னனின் இடத்தை மத்திய அரசும் நந்தி போல தடுக்கும் நக்கீரன் இடத்தை அதிகார வர்க்கமும் ஆக்கிரமித்திருக்கிறது. தருமியின் துயர் நீக்க போராடிய சிவபெருமான் போல தொடர்ந்து போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. தோழர்கள் பி.மோகன், என்.நன்மாறன், ஆர்.அண்ணாதுரை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொடுத்த பாரம்பரியம் இருக்கிறது.

அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக மதுரை மக்களவை உறுப்பினராக தோழர் பா.விக்ரமன் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை மட்டுமல்ல வட சென்னை, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல், கோயம்பத்தூர், தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்த பெருமையை நீங்கள் பெறலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சுத்தியல் அரிவா நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்.












No comments:

Post a Comment