Friday, April 25, 2014

கங்கை அழுததால் அதிகரித்தது பாவம்



http://www.terragalleria.com/images/india/indi39047.jpeg

அபலையாய் மனைவியை ஒதுக்கிய பாவம்,
ஆரணங்கு ஒருத்தியை துரத்திய பாவம்,
இஸ்லாமியர்களை கொன்ற பாவம்,
என்கவுண்டர் நாடகம் நடத்தி
உயிர்கள் பல எடுத்த பாவம்,
நாயின் பிள்ளை என்று சொல்லி
ஆணவமாய் நடந்த பாவம்,
பொய்கள் பல பேசி பேசி
பொய்யராய் வாழும் பாவம்.

எத்தனை முறை முழுகினாலும்
எந்த நதியிலும்
நீங்காது இவர் பாவம்.

இவரைத் தான்தான்  அழைத்தாக
சொன்ன இன்னொரு பொய்யைக்
கேட்டு கங்கை அழுத
கண்ணீரால் இணைந்தது
இன்னொரு பாவம்.

பாவத்தின் சம்பளமாய்
இவருக்கு மட்டும் 
பதவிதான் வேண்டுமாம்....
 

1 comment: