Sunday, April 20, 2014

நீ செல் நரகத்திற்கு

இதுதான் எங்கள் வீடு,
இந்தியாதான் எங்கள் நாடு.
இங்கேதான் பிறந்தோம்,
இங்கேதான் வளர்ந்தோம்,
முதுமையிலோ இல்லை
உங்களைப் போன்ற 
மூர்க்கர்களாலோ
எங்கள் வாழ்வு முடிந்தாலும்
இங்கேயே சாம்பலாய் 
மறைவோம்.

எங்கள் முன்னோர்
ரத்தம் சிந்திப் பெற்ற
சுதந்திரக் காற்றை
சுவாசித்துக் கொண்டே

மனிதம் மறந்த அரக்கனை
உண்மை மறைக்கும் பொய்யனை

உயிர் உள்ளவரை
உணர்வுள்ளவரை
பேசிக்கொண்டும்
எழுதிக்கொண்டும்
எதிர்த்துக் கொண்டே
இருப்போம், இந்தியாவைக் காப்பாற்ற.

எங்களை வெளியேறச் சொல்ல
உனக்கேது உரிமை?
எங்களின் வெப்பக் காற்று
வீசிக் கொண்டே இருக்கும்.
அநீதிக்கு எதிராக அனலாய்
பொங்கிக் கொண்டே இருப்போம்.

உண்மைகளின் உஷ்ணத்தை
உன்னால் தாங்க முடியாவிட்டால்
உங்கள் புராணங்கள் உருவாக்கிய
நரகத்திற்கு நீ செல்.
இந்தியா மாறிடும்
சொர்க்க பூமியாய்.

No comments:

Post a Comment