Tuesday, July 16, 2019

கை தட்டி பாராட்டுவோம் . . .



தமிழக எம்.பிக்களின் முதல் வெற்றி

அஞ்சல் துறை தேர்வுகளை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே எழுத முடியும் என்று விதி போட்டு தேர்வும் நடத்தி முடித்து விட்டார்கள்.

ஆனால் இன்று தமிழக எம்.பிக்கள் (ஓபிஎஸ் மகன் நீங்கலாக) மக்களவையை போராட்ட களமாக மாற்றி வீரச்சமர் நடத்தியதில் மோடி அரசு தன் முடிவை மாற்றியது.

அனைத்து மாநில மொழிகளிலும் இனி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தது மட்டுமல்லாது ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வையும் ரத்து செய்து விட்டது.

தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்களின் ஒற்றுமைக்கும் போராட்ட உணர்விற்கும் கிடைத்துள்ள முதல் வெற்றி இது.

அனைவரையும் பாராட்ட வேண்டிய தருணம் இது . .

எத்தனை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை பெரிதல்ல. எப்படி செயல்படுகின்றனர் என்பதுதான் முக்கியம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த வெற்றி இனியும் தொடரும்.

No comments:

Post a Comment