Sunday, July 28, 2019

தளபதி 2019 - நியூ வெர்ஷன் . .


அதானி என்றால் அனைத்துமே . . .

திருவனந்தபுரம், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூர், கௌஹாத்தி, அகமதாபாத் விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது என்று முடிவெடுத்தது மத்தியரசு. அதற்காக டெண்டரும் விட்டது. 

நிதியமைச்சகமும் நிதி அயோக்கும் இரண்டு நிபந்தனை போட்டது. 

ஒரு நிறுவனத்திற்கு இரண்டு விமான நிலையங்களை மட்டுமே அளிப்பது என்று ஒரு நிபந்தனை. (எல்லா பெரு முதலாளியும் பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்ற நல்லெண்ணம்)

டெண்டர் எடுக்கும் நிறுவனத்திற்கு விமான நிலையம் நடத்திய அனுபவம் இருக்க வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை.

ஆனால் ஆறு விமான நிலையங்களுக்கும் அதிக விலைக்கு டெண்டர் கொடுத்தது அனுபவம் எதுவுமே இல்லாத அதானி.

அதானிக்கு எதிராக நிபந்தனையைச் சொல்ல முடியுமா? விமான நிலையம் நடத்தியிராவிட்டாலும் மோடிக்கு ஓசியில் விமானம் கொடுப்பவராயிற்றே!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை நாங்களே நடத்துகிறோம் என்று டெண்டர் கேட்ட கேரள அரசை நிராகரித்தது போல அதானியை நிராகரிக்க முடியுமா?

ஆகவே நேற்று மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக மூன்று விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்த்து விட்டது.

அடுத்த மூன்று அடுத்த வாரமாம் . . .

வாழ்க மோடி!
வளர்க அவரது அதானி தேசம்!

3 comments:

  1. இந்தியா என்ன மோடியின் அப்பன் வீட்டு சொத்தா?

    ReplyDelete
  2. Thirvannandapuram Airport should go to Kerala Gvt, they are the one who built the solar power system to generate all the power..it is a pity..Kerala government should go to court.

    ReplyDelete
  3. அருமையான ஒப்பீடு

    ReplyDelete