Saturday, July 27, 2019

ம், இன்னிக்கு இந்நேரம் . . .



ஆழ்ந்த பெரு மூச்சு விட வேண்டியுள்ளது.

இன்றைக்கு இப்படியெல்லாம் காலையில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து சாவகாசமாக பதிவெழுதல்லாம்  வாய்ப்பே கிடைத்திருக்காது.

ஆமாம்.

எங்கள் கோட்டச்சங்கத்தின் 32 வது பொது மாநாடு இன்றும் நாளையும் வாணியம்பாடியில் நடைபெறுவதாக இருந்தது.

வழக்கமாக இந்நேரத்தில் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதா என்று பார்த்திருப்போம். கிளைகளிலிருந்து வரும் தோழர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருப்போம். காலை உணவு பரிமாறத் தொடங்கி விட்டார்களா என்று கேட்டுக் கொண்டு இருந்திருப்போம். பேரணி தொடங்கும் இடத்திற்கு கொடிகள், கோரிக்கை அட்டைகள் போய் விட்டதா என்று உறுதிப் படுத்திக் கொண்டிருப்போம். 

அவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்க வேண்டிய நேரத்தில் இப்போது நிதானமாக பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆமாம். 

மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தல் ஆகஸ்ட் ஐந்தாம் நாள் நடைபெறவுள்ளதால் 

எங்கள் மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம்.

மாநாட்டில் பேரணி நடத்தக் கூடாது, பிரச்சாரம் கூடாது,  மக்கள் ஒற்றுமை கலை விழா நடத்தக் கூடாது, விளம்பர பேனர் வைக்கக் கூடாது, கொடி கட்டக் கூடாது என்று முதலில் பல நிராகரிப்புக்கள்.

பிறகு அரங்கத்தில் கூட நடத்தக் கூடாது என்று அழுத்தம். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம். தேர்தல் நடத்தை விதி, நான் என்ன செய்ய முடியும் என்று அவரும் கை விரித்து விட்டார்.

தேர்தல் சமயத்தில் அரசியலற்ற நடவடிக்கைகள் கூடாது என்பது வினோதமாகவே இருக்கிறது.

மக்களிடம் மாநாட்டுச் செய்தியை எடுத்துச் செல்லாமல் மாநாடு நடத்தி என்ன பயன் என்று கலந்தாலோசித்து மாநாட்டை  செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டோம்.

வேலூர் தொகுதி தேர்தல் இம்முறையாவது ஒத்தி வைக்கப்படாமல் ஒழுங்காக நடக்கட்டும். . .

No comments:

Post a Comment