Monday, March 25, 2019

நிரந்தரமாக நீக்குங்கள் ஸ்டாலின்




ராதாரவியின் உரையைக் கேட்டேன். மிகவும் கேவலமான சிந்தனை உள்ளவர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. 

திரையில் மட்டுமல்ல, நிஜமான வாழ்க்கையிலும் ஒரு வில்லன், பெண்களை இழிவு படுத்தும் பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.

இப்போது மோடி எப்படி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை இழிவு படுத்திப் பேசினாரோ, அதே இழிவை ஒரு வருடம் முன்பு செய்தவர்தான் ராதாரவி.

இப்போது ராதாரவியை திமுக கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இது போதுமானதல்ல.

இந்த பிரச்சினையில் ராதாரவியைக் கண்டித்த திரைக் கலைஞர் தோழர் ரோகியை ட்ப்பிங் யூனியனிலிருந்து நீக்கி உள்ளார் ராதாரவி. 

ஆக அவருடைய ஆணவம் மாறப் போவதில்லை. இது போன்றவர்கள் இருப்பதனால் திமுக விற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. இவர் பேச்சைக் கேட்டு மக்கள் கடுப்படைவதற்கான வாய்ப்பு வேண்டுமானால் வரலாம்.

ஆகவே ராதாரவியை திமுக விலிருந்து நிரந்தரமாக நீக்கி விடுங்கள் திரு ஸ்டாலின்.

பிகு: ராதாரவியின் அந்த ஆபாசப் பேச்சிற்கு சில ஜென்மங்கள் கை தட்டியுள்ளதே, அவர்கள் எப்படிப்பட்ட ஆசாமிகளாக இருப்பார்கள்?


1 comment:

  1. ராதாரவி ஆபாசமாக பேசுகிறார் என்று முன்பு சின்மயி குற்றம் சாட்டும்போது
    வராதவர்கள் இப்போது த ற்காலிகமாக கட்சி நீக்கம் செய்கிறார்கள் என்பது
    கொடநாட்டு சதி ,ஜெகத்ரக்ஷகனின் 26000 கோடி இலங்கை முதலீடு ஆகியவற்றில் இருந்து
    மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதே .உண்மை .

    ReplyDelete