Friday, September 7, 2018

இதையாவது செய்யுங்கள் எடப்பாடி. . .



யானை மாலை போட்டு பிச்சைக்காரன் அரசனான கதைதான் நீங்கள் முதல்வரான கதை.

உருப்படியாக நீங்கள் இதுவரை எதுவும் செய்தது கிடையாது. அடுத்த தேர்தலுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ, அதை சுருட்டுவது என்பதைத் தவிர வேறு எந்த இலக்கும் உங்களுக்கோ, உங்கள் சகாக்களுக்கோ கிடையாது. அதனால்தான் பாசிஸ பாஜக கட்சியின் அடிமையாக உள்ளீர்கள்.

வரலாற்றில் இடம் பிடிக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவரது விடுதலையை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ள நிலையில் முன்னரே தமிழக சட்டப் பேரவை, அதிலும் நீங்கள் சொல்வது போல உங்களின் அம்மா ஆட்சி முடிவு செய்த விடுதலையை உறுதிப்படுத்துங்கள். 

பொன்னார் போன்ற ஜோக்கர்கள் தலையிட அனுமதிக்காமல் விரைந்து செயல் பட்டு அவர்களை விடுதலை செய்யுங்கள்.

இது நாள் வரை எதுவும் செய்யாத நீங்கள்
இதையாவது செய்திடுங்கள்


2 comments:

  1. எப்போதும் ஒரு பக்க வெறுப்போடு மட்டும் எந்த பிரச்சினையும் அணுகாதீர்கள்

    எடப்பாடிக்கு இந்த விடயத்தில் முக்கிய சிக்கலை கொடுக்க போகின்றவர்கள் பொன்னார் அல்ல
    குரு மூர்த்தியும் , காங்கிரஸ் ( தமிழ்நாடு ) தான்
    .
    இந்த வாய்ப்பு வருவது இது முதல் தடவை அல்ல
    பல தடவை வந்தது கருணா , ஜெயா காலத்தில் கூட வந்தது ஆனால் அரசியல் லாபம் கருதி இரண்டு பேரும் பல்டி அடித்தார்கள்
    .

    ReplyDelete
    Replies
    1. பொன்னார் அறிக்கையை படிக்கவில்லையா?

      Delete