Monday, September 17, 2018

அன்றும் இன்றும் அஞ்சி நடுங்கி . . .



பெண்களை பேதையாய் எண்ணி
அடிமைகளாய் நடத்திய
அக்கிரமம் நீங்க
குரல் கொடுத்தீர்.

சமத்துவமும் சமூக நீதியும்
மலர காலமெல்லாம்
உழைத்தீர்கள்

மூளைச்சலவை செய்து
மூடத்தனத்தை வளர்த்த
மதங்களுக்கு எதிராய்
உயிருள்ளவரை பாடுபட்டீர்.

உடல் பிணி சுமந்து
ஊரூராய் அலைந்தாலும்

போகப் பொருளாய்
பெண்களைப் பார்க்கும்
பார்வை மங்கிடவில்லை.

அரசியல் ஆதிக்கம் பெற
ஜாதியின் ஆதிக்கத்தை
நீட்டிக்கும் அவலம்
மாறிடவில்லை.

கடவுளின் பெயரால்
சிலைகள் வைத்து
சில சில்லறைகள் ஆடும்
ஆட்டமும் நிற்கவில்லை.

அன்றும் இன்றும்
அவர்கள் வெறுப்பதும்
அஞ்சி நடுங்குவதும்
உம்மைக் கண்டென்றால்

நீங்கள் பற்ற வைத்த
பகுத்தறிவு நெருப்பு
இன்னும் வெப்பத்தோடு
அவர்களை 
சுட்டுக் கொண்டுதான் இருக்கிறது!

தொடர்வோம் உம் பயணத்தை . . .
உரக்கச் சொல்வோம்
உம் கருத்துக்களை . . .



1 comment:

  1. பகுத்தறிவு நெருப்பு
    இன்றும்
    என்றும்
    வெப்பத்தோடு
    சுட்டுக் கொண்டுதான் இருக்கும்

    ReplyDelete