Wednesday, September 12, 2018

பாவம், காவிப் பிள்ளையார்கள்!!!




ஒரு தோழர் வீட்டு புது மனை புகு விழாவிற்கு மதியம் காட்பாடி வரை சென்றிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக பரபரப்பான போக்குவரத்து.. நாளைக்காக வீதி முனைகள் ரிசர்வ் செய்யப்பட்டு பந்தல்கள் போடப்பட்டதாலும் குட்டி யானை வண்டிகளில் சென்று கொண்டிருந்த பிள்ளையார் சிலைகளாலும் ஏற்பட்ட நெரிசல் அது. மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போதும் இதே நிலைதான்.

நாளையை நினைத்தாலும் அதற்குப் பிறகு வரப் போகும் “விஸர்ஜன ஊர்வலம்” என்ற பெயரில் நடைபெறப் போகும் கலாட்டாவை நினைத்தாலும் கவலையாகத்தான் உள்ளது.

உண்மையிலேயே  பிள்ளையார்தான் பாவம்.

ஹை டெசிபல்களில் ஒலிக்கும் குத்துப் பாட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறுவர்கள் “உண்டியல் குலுக்கிகள்” ஆக மாறி சாலையில் செல்பவர்களை மறித்து வசூல் செய்வதை  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.

ஊர்வலத்தின் போது பக்தர்கள் என்ற போர்வையில் உலா வருபவர்களிடமிருந்து வீசும் டாஸ்மாக் நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டும்.

மசூதியோ, சர்ச்சோ வந்தால் வேண்டுமென்றே அங்கே நிறுத்துவார்கள். கடுமையான வெயிலை வேறு அனுபவிக்க வேண்டும்.

கடைசியாக விஸர்ஜனம் என்ற பெயரில் கட்டையால் அடித்து உடைத்து கீழே தள்ளுவார்கள். அதனையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

ஆற்றங்கரையிலும் கோயில்களிலும் ஏன் தெரு முனைகளிலும் கல்லால் உருவாக்கப்பட்ட காலத்தில் பிள்ளையாருக்கு இந்த அவஸ்தையெல்லாம் கிடையாது. வீட்டில் வைக்கப்படும் களி மண் பிள்ளையார்களுக்குக் கூட குடை, மாலை, கொழுக்கட்டை என்றெல்லாம் மரியாதை கிடைக்கும்.

எல்லா அவஸ்தையும் பாவம் காவிப் பிள்ளையார்களுக்குத்தான்.

ஏனென்றால் காவிகளுக்கு பிள்ளையார்கள் கடவுள் கிடையாது. அரசியல் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான் . . .

பி.கு ; அதிகாலையில் பின்னூட்டம் போடும் ஆங்கில அனாமதேய சங்கி வழக்கம் போல வாந்தி எடுத்தால், முன்னை விட மோசமான பதில் மரியாதை கிடைக்கும். வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணையற்ற காவிக் கயவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். பி.கு 2
கேள்வி : உலக மகா அயோக்கியர்களாக இருக்கையிலேயே பெரிய . . . .. . . மாதிரி எழுதுகிற இந்த கயவர்கள் நெசமாகவே தேச பக்தர்களாக இருந்தால் எப்படி எழுதுவார்கள்? 

பதில் : அவர்கள் கயவர்களாக இருப்பதால்தான் இப்படி நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

No comments:

Post a Comment