Friday, May 4, 2018

55 மானஸ்தர்கள் வாழ்க !!!


தேசிய திரைப்பட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிர்தி இராணி அம்மையார் வழங்குவார் என்று முதல் நாள் அறிவிக்கப்படுகிறது. கலைஞர்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு எண்பது பேர் கையெழுதிட்டு ஒரு கடிதமும் அனுப்புகிறார்கள். 

"நீ என்ன வேணா கத்து, எங்க இஷ்டப்படிதான் நடப்போம்"  என்ற வழக்கமான ஆணவப்படி மோடி அரசு செயல்பட

55 கலைஞர்கள் விழாவை புறக்கணித்து விட்டனர். 

வழக்கமான மரபை ஆணவத்தோடு மாற்ற நினைத்த மோடி வகையறாக்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அந்த 55 மானஸ்தர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இதர கலைஞர்களும் இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கடிதத்தில் கையெழுத்திட்ட  திரு கே.ஜே.யேசுதாஸ் விழாவில் கலந்து கொண்டது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு ஜனாதிபதி விருது கொடுத்தாலும் மற்றவர்களுக்காக அவர் விழாவை புறக்கணித்திருந்தால் வீச்சு இன்னும் பலமாக இருந்திருக்கும். 

No comments:

Post a Comment