Friday, January 26, 2024

ஜனாதிபதி - ரொம்பவுமே நல்லவங்க . . .

 


நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டது போலவே ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையிலும் புறக்கணிக்கப்பட்டார் இந்திய முதல் குடிமகள்.

ஆனாலும் அவர் தன் குடியரசு தின உரையில் ராமர் கோயிலை விதந்தோந்தி பேசினார். இந்திய நீதித்துறையின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் அடையாளம்தான் ராமர் கோயில் என்று வேறு காமெடியாக பேசினார். அதை எழுதிக் கொடுத்த ஆளுக்கே எழுதும் போது சிரிப்பு வந்திருக்கும்.

எவ்வளவுதான் அரசால் இழிவு படுத்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசை பாராட்டவே செய்கிறார்.

பாவம் ரொம்பவே நல்லவர்!

No comments:

Post a Comment