Tuesday, January 30, 2024

கோட்ஸேவின் தோட்டாக்களை . . .

 


சுதந்திர இந்தியாவின்
முதல் களங்கம், அந்த 
முதல் அரசியல் படு கொலை,
கோட்சேவின் தோட்டாவிற்கு
காந்தி மட்டுமா குறி!
மத நல்லிணக்கமும் 
மக்கள் ஒற்றுமையும்
மாண்டு போகத்தானே சுட்டான் அவன்!
சுட வைத்தார்கள் அவர்கள்!!

கோட்சேவின் தோட்டாக்கள்,
இன்றும் துரத்துகிறது,
ஆளும் கட்சியாய், அதன் குருபீடமாய்,
அற்ப சங்கிகளாய்,
அமலாக்கத்துறையாய், ஆளுநரிகளாய்,
மக்கள அழிக்க மேலும் வெறியுடன்.

தாக்க வரும் தோட்டாக்களை 
துரத்தி விட தவறினால் 
ஆயிரமாயிரம் காந்திகள்
ரத்தம் சிந்துவர்,
அஞ்சலி செலுத்த யாருமின்றி



No comments:

Post a Comment