Thursday, January 4, 2024

ஆஜான் Vs ஆ.கு.ப.த லச்சூ

 


ஆம். பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பது போல ஆஜானுக்கும் ஆஜான் குண்டர் படைத் தளபதி லட்சுமி மணிவண்ணனுக்கும் மோதல்.

 லச்சூவின் முகநூல் பதிவு, பின்னூட்டங்கள் கீழே உள்ளன.

 









ஜெமோவின் அத்யந்த நண்பர்களாக ஒரு கோஷ்டி உண்டு. அவர்களை நான் குண்டர் படை என்றும் லச்சூதான் அதன் தளபதி என்றும் பல முறை எழுதி உள்ளேன். இப்போது லச்சூவும் அதையே  ஜெமோவின் வாசகர்களை bouncer என்று அழைக்கிறார்.

 ஜெயமோகனையும் தோழர் ஆதவன் தீட்சண்யாவையும் நீங்கள் ஒப்பிட்டால் நான் இலக்கிய உலகை விட்டே வெளியேறி விடுவேன் என்கிற அளவிற்கு எழுதி தன் ஆஜான் விசுவாசத்தை காண்பித்து  லச்சு ஏன் இப்போது ஆஜானுக்கு எதிராக?

 அதற்கும் பதில் கிடைத்து விட்டது. ஒரு பின்னூட்டத்தில் லச்சூவே சொல்லி விட்டார்.

 


ஆக, ஆஜான், தன் மகன், மனைவி, மகள் ஆகியோரை மட்டுமே முன்னிறுத்துவதுதான் பிரச்சினையாக இருந்திருக்கிறது. “நாங்க உனக்காக அடி வாங்குவோம். நீ உன் குடும்பத்தைத்தான் வாரிசுன்னு சொல்வியா” என்பதுதான் லச்சுவின் கோபத்திற்குக் காரணம்.

 

வழக்கமாக ஆஜான் போலிப்பெயர்களில்  கேள்வி எழுப்பி நூறு பக்கங்களில் பதில் சொல்வார்.

 

செல்ஃபி கேள்வி கேட்கும் சிரமத்தை அவருக்கு குறைக்கலாம் என்று பின் வரும் கேள்வியை அவருக்கும்  அவர் அட்மினுக்கும் அனுப்பி வைத்தேன்.

 ஐயா,


உங்களின் பிரதான பிரச்சாரகராக இருந்த திரு லட்சுமி மணிவண்ணன், உங்கள் உரைநடைகளை "பகுதி உண்மைகளின் உளறல்கள்" என்றும் உங்கள் வாசகர்களை "பௌன்ஸர்களாக மாற்றிக் கொண்டிருப்பதாக"வும் குறை சொல்லி, "மனைவியை, மகனை, மகளை முன்னிறுத்துவதாகவும் விமர்சித்துள்ளாரே.

இது பற்றிய உங்கள் விளக்கத்தை உங்கள் தளத்தில் அளிப்பீர்களா?

இவண்

உங்களால் இணைய மொண்ணை பட்டம் அளிக்கப்பட்ட
எஸ்.ராமன், வேலூர்.

இதோ இந்த பதிவை முடிக்கும் வரை ஆஜானிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. பாவம், அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்! ஆஜானின் இந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு…

No comments:

Post a Comment