Tuesday, January 9, 2024

பில்கிஸ் பானு - நீதி நிலைக்கட்டும்

 


டிமோ நடத்திய காட்டுமிராண்டித்தனமான கலவரத்தில் குடும்பத்தினரை கண் முன்னே இழந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பில்கிஸ் பானுவின் துயரத்துக்கு காரணமான கயவர்களை விடுதலை செய்தது குஜராத் பாஜக அரசு.

அந்த முடிவு செல்லாது என்றும் அந்த அயோக்கியர்கள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பில்கிஸ் பானு, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் சுபாஷினி அலி உள்ளிட்ட ஐவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது.

நீதிபதிகள் குஜராத் அரசை கடுமையாக சாடியுள்ளனர். இறுதியாக நீதி கிடைத்தது மகிழ்ச்சி.

ஒரே ஒரு நெருடல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் வழக்கு நடந்ததால் முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குக் கிடையாது என்ற ஒற்றை வரியை பயன்படுதி, கட்சி மாறி ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தி மீண்டும் கயவர்கள் விடுதலையாகக் கூடாது.

கயவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால்தான் நீதி நிலைக்கும் ..

No comments:

Post a Comment