Tuesday, January 23, 2024

ரெவி, நிர்மலா - அருகதையற்றவர்கள்.

 



 

தினமலரில் ஒரு பொய்ச்செய்தி வருகிறது. அதை பகிர்ந்து கொண்டு ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார் நிர்மலா அம்மையார்.

 


கவர்னர் வேலையைத் தவிர மற்ற எல்லா எழவையும் செய்கிற ஆட்டுத்தாடி ரெவி, மாம்பலத்தில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனாராம், அங்கே முகத்தில் புலப்படாத அச்ச உணர்வு அங்கே இருந்த பூஜாரிகள் முகத்தில் தென் பட்டதாம். கண்ணுக்கு புலப்படாத அச்ச உணர்வை பார்க்க இவர் ஏதாவது நெற்றிக்கண் ரஜினிகாந்த் மாதிரி ஏதாவது ஸ்பெசல் கண்ணாடி அணிந்திருந்தாரா என்ன?

 

ஆனால் அந்த கோயில் அர்ச்சகர், ரெவியின் கன்னத்தில் அடித்தது போல, அது சொன்னது பொய் என்று சொல்லி விட்டார்.

 

பொய்ப்பிரச்சாரம் மூலம் பிரிவினையை, வெறுப்பை, கலவரத்தை தூண்டும் இந்த இரண்டு ஜந்துக்களும் அரசியல் சாசனப் பொறுப்பில் இருக்க தகுதியற்றவர்கள்.

 

தமிழ்நாடு அரசு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும். இவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

 

சுமோடா வழக்காக இதையும் சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளுமா?

No comments:

Post a Comment