Friday, January 26, 2024

அடுத்தாண்டாவது குடியரசு தினம் அர்த்தமுள்ளதாகட்டும்



 இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்

 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்

சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்
அனைவருக்கும் சம வாய்ப்பினையும்
சகோதரத்துவத்தையும்
கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்
 பாதுகாப்போம்

 என்று சொல்கிற அரசியல் சாசனத்தை இந்தியா அமலாக்கிய நாளான  குடியரசு தினம், 

வெற்றுக் கொண்டாட்டமாகத்தான் பத்து வருடங்களாக உள்ளது. அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள எந்த உரிமையையும் வழங்காத, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சீரழிக்கிற கேடு கெட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் வந்தால் வெற்றுக் கொண்டாட்டத்தின் இறுதி ஆண்டாக இன்றைய தினம் இருக்கும். குடியாட்சி மறைந்து போகும்.

குடியரசு தினம் அர்த்தமுள்ளதாக டிமோ வகையறாக்களை வீழ்த்துவதே நம் கடமை என்பதையே குடியரசு தின வாழ்த்துச் செய்தியாக உரித்தாக்குகிறேன். 

No comments:

Post a Comment