Thursday, January 4, 2024

புமா ஆஜானே, மறுபடியும் முதலேருந்தா?

 


கீழடி தொடர்பாக புளிச்ச மாவு ஆஜான் சமீபத்தில் உதிர்த்த முத்து கீழே


கீழடி தொடர்பாக இதற்கு முன்பாகவும் ஆஜான் வாங்கிக் கட்டிக் கொண்டாரே என்பது நினைவுக்கு வர ஏழாண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவை கண்டு பிடித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

கீழடி ஆய்வை டிமோ அரசு முடக்க முயன்ற போது அதற்கெதிரான இயக்கத்தை தமுஎகச முன்னெடுத்ததும் அன்றைய தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசனின் முயற்சிகளும் ஆஜானுக்கு எரிச்சல் தர, "இவர்கள் யார் கீழடிபற்றி பேச, தொல்பொருள் ஆராய்ச்சியாளரா, வரலாற்று அறிஞரா" என்றெல்லாம் கேட்டிருந்தார்.

அப்போது எழுதிய பதிவு கீழே

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஒரு கேள்வி ஆஜானே?

  

ஜெமோவின் எழவெடுத்த பக்கம் வழக்கமாக செல்ல மாட்டேன். மாணவி அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி போல இந்த மனிதனும் ஏதாவது பிதற்றியுள்ளாரா என்று பார்க்கச் சென்றேன். இன்னும் ஆசான் அது பற்றி எழுதவில்லை. ஆனால் கீழடி பற்றி பத்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட நிர்மலா சீத்தாராமனின் குரல் அது.

 கீழடிப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு 

 தமிழ் ஃபாசிஸ்டுகள்,

அசடுகள்

அரை வேக்காடுகள்

 என்றெல்லாம் முத்திரை குத்தியுள்ளார்.

 தமுஎகச தோழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 கீழடி பற்றி யார் பேச வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

அதைப் படியுங்கள்.

 கீழடியைக் குறித்தவரை இவ்விவாதம் உருவாவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அங்கு இன்னும் ஆய்வே முறையாகத் தொடங்கப்படவில்லை.    கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவிவாதத்தை 

தங்களுக்குள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். 

அதற்குள்ளாகவே      இங்கே     மேடைப்பேச்சாளர்களும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் – அதாவது    தொல்லியலாளர்கள்  வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்த அத்தனை பேரும் எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்னென்ன முடிவுகளுக்கு வர

வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

மேலே ஆசான் சொன்ன அடிப்படையில் அவருக்கு ஒரே ஒரு கேள்வி.

 அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் வேறு யாரும் பேசக் கூடாது என்றால் செல்லா நோட்டு விவகாரத்தில் மோடிக்கு முட்டு கொடுத்து வரிந்து வரிந்து எழுதினீர்களே, நீங்கள் என்ன பொருளாதார நிபுணரா? இல்லை அல்லவா?

 பின்னே என்ன எழவிற்கு அதைப் பற்றி எழுதினீர்கள்?

---------------------------------------------------------------------------------------------------------

ஆஜானை ஏற்கனவே பிளக்க ஆரம்பித்து விட்டார்கள். வடிவேலு பாணியில் "மறுபடியும் முதலேருந்தா" என்று புலம்பிக்கொண்டிருப்பதாக தகவல்.

கீழடியை மட்டம் தட்டும் வேலையை நீ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தால் அடியும் மறுபடியும் முதலில் இருந்துதான் கிடைக்கும்.

அப்பா சுயமோகா, கீழடி பற்றி வரலாற்று அறிஞர்களும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களும்தான் பேசனும்னு ஏழு வருஷம் முன்னாடி உபதேசம் செஞ்சியே, நீ மட்டும் என்ன வரலாற்று அறிஞரா? இல்லை தொல்பொருள் ஆராய்ச்சியாளரா?

பதில் சொல்லுய்யா . . .

பிகு: இந்த பதிவெல்லாம் ஜுஜுபி. ஆஜான் தொடர்பான இன்னொரு பதிவு மாலையில் வரும். அது பரபரப்பானது. உங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கும்.  


No comments:

Post a Comment