Thursday, May 2, 2019

வடிவேலு இடத்தில் அல்ல சீமான் . . .



நேற்று இரவு ஒரு தோழர் இந்த காணொளியை    அனுப்பியிருந்தார். முப்பது நொடிகள்தான்.  அதற்குள்ளாக எவ்வளவு காமெடி! வடிவேலுவின் புதிய திரைப்படங்கள் வராத நிலையில் வெரைட்டியான காமெடி வழங்குபவராக சீமான் உருவாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது பேச்சுக்களை கேட்டாலே மனதில் உள்ள பாரமெல்லாம் நீங்கி விடும். அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை.








வடிவேலுவின் இடத்திற்கு சீமான் வந்தால் பரவாயில்லை.

ஆனால்

அவரது அபத்தமான உரைகளுக்கு அவரது நா.த.க தம்பிகள் செய்கிற ஆரவாரமும் அவர் சொல்வதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதும்தான் கவலையளிக்கிறது.

தேசியவாதம் பேசி மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டும் மோடிக்கும் தமிழ் தேசியம் பேசுகிற சீமானுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இன்று நா.த.க கட்சியினர் செய்கிற பிரதான வேலையே சீமான் சொல்லும் அபத்தங்களுக்கு எதிர்வினையாற்றுபவர்களின் மரபணு ஆராய்ச்சி செய்து அவர்கள் எந்த ஜாதி என்று தவறாகவாவது கண்டுபிடித்து அவர்களுக்கு வந்தேறி முத்திரை குத்துவதாகத்தான் இருக்கிறது. ஆபாச மொழியில் வசை பாடுவது என்பது இரண்டாவது வேலை.

இந்தியா முழுதும் பாஜக செய்யும் வேலையை அதன் தமிழகப் பிரதிநிதியாக நாம் தமிழர் கட்சி செய்கிறது.

மோடி எதைச் சொன்னாலும் அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருப்பது போல சீமான் சொல்வதையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

அந்தக் கூட்டத்தில் பெரும் பகுதியினர் இளைஞர்கள் என்பதுதான் உண்மையிலேயே கவலையாக இருக்கிறது. சீமான் சொல்வதெல்லாம் நடக்கும் என்று நம்புபவர்கள், அது பொய்த்துப் போகும் போது எப்படிப்பட்ட மன நிலைக்கு உள்ளாவார்கள்?

ம்ம்ம்ம்ம்

எத்தனை மூளைச்சலவை செய்யப்பட்டவர்களைத்தான் இந்தியா தாங்கும்?


1 comment:

  1. சீமான் காமெடியைப் பாருங்க. சிரிச்சுட்டு போய்டுங்க

    ReplyDelete