Sunday, May 26, 2019

உங்க ஆணியே வேண்டாம் கண்ணுங்களா





இந்த சங்கி மட்டுமல்ல, ஒவ்வொரு சங்கியுமே இப்படித்தான் தெனாவெட்டாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் கை கூப்பி மன்றாடுகிறேன்.

தயவு செய்து இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விடுங்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி தமிழகத்திற்கு கொண்டு வந்த ஆணிகள் எல்லாமே தேவையற்ற ஆணிகள்தான்.

மதுரையில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் க்கு அடிக்கல் நட்டிட்டு அம்போ என்று போன கதைதான் உங்க லட்சணம். இதுல ஆஸ்பத்திரியே கட்டி முடிச்சாச்சுன்னு முட்டாள்தனமா ஒருத்தன் வீடியோல பேசி, தமிழர்களை முட்டாப்பசங்க என்று சொல்கிறான். 

மீத்தேன், ஹைட் ரோ கார்பன், பெட் ரோ மண்டலம், எட்டு வழிச் சாலை, சாகர் மாலா என்று எல்லாமே வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக தமிழக மக்களை அழிக்கும் திட்டங்கள்தான். 

ஸ்டெரிலைட்டிற்காக மரண தூதுவனாய் செயல்பட்டதை மறந்து விட முடியுமா?

தமிழகத்தின் வேலை வாய்ப்புக்களை மற்றவர்களுக்கு மடை மாற்றி விட்டதையும்தான் . . .

அதனால்தான் சொல்கிறேன்.

உங்கள் அழித்தொழிப்பு திட்டங்கள் எதுவும் எமக்கு தேவையில்லை. 

தமிழகத்தின் வரிப்பணம்தான் மத்தியரசுக்கு சென்றுள்ளது.  ரோஷம் உள்ளவராக இருந்தால் அதைத் தொடாமல் எங்களுக்கே கொடுத்து விடுங்கள். 

1 comment:

  1. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்கள் கருத்து என்ன சார் ?
    ( மோடி தொடர்பாக வினாவவில்லை)
    .
    அணுமின் நிலையம் தொடர வேண்டுமா ? கூடாதா ?

    ReplyDelete