Wednesday, May 22, 2019

மறக்க மாட்டோம் மாபாதகக் கொலைகளை . . .

மோடி எடப்பாடி கொலைகாரக் கும்பலால் உயிர் நீத்தவர்களுக்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள், 



கடந்த ஆண்டு இதே நாளில்தான்  விஷம் பரப்பிய ஸ்டெரிலைட் ஆலையை மூட வேண்டும் என்று அமைதியாக பேரணியாகச் சென்றவர்கள் மீது காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை ஏவி விட்டு பதிமூன்று உயிர்களை குடித்தார்கள். பின்பு இன்னும் இருவர் இறந்து போனார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக யாரும் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் போராடக் கூடாது என்பதற்காக கார்ப்பரேட்டுகளின் சேவகன் மோடி ஏவி விட்ட அராஜகம். மோடி வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் எடப்பாடி நிகழ்த்திய கொடூரம்.

தமிழகத்தில் ஜனநாயகம்  புதை குழிக்கு போய் விட்டது என்பதன் உதாரணம் இக்கொடிய சம்பவம்.

உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்.

உங்களையும் எந்நாளும் மறவோம்.
உங்களது மரணத்திற்கு பின் நின்ற பாவிகளையும் மறவோம். அவர்களை வீழ்த்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


No comments:

Post a Comment