Sunday, December 18, 2016

ஜெமோ க்கு எதிராக மபு சதி ?????



தன்னுடைய  ஒரு  நூல் ஒன்று இந்தாண்டு சாகித்ய அகாடெமி விருது பெறும் வாய்ப்புள்ளது என்று நேற்று இரவு மனுஷ்யபுத்திரன் கொளுத்திப் போட முகநூல் பற்றிக் கொண்டு எரிகிறது.

நேற்று தமிழ் இந்துவில் வந்த ஜெமோ கருத்தை நக்கலடித்தே ம.பு எழுதியுள்ளதாக நான் உணர்கிறேன்.

அதையும் தாண்டி யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் திராட்சை புளிக்கும் என்று ஏமாந்து போகிற ஜெமோ நரிக்கு இந்த ஆண்டு பரிசு கிடைக்க இலக்கியமற்ற காரணங்களுக்காக ஏதாவது லாபியிங் நடந்து அதை முறியடைக்க  ஒரு சர்ச்சையை ம.பு கிளப்பி விட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

இந்த வேலையெல்லாம் வேண்டாம்.

சாகித்ய அகாடெமி விருதை தமிழகத்தில் உள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து பரிந்துரைத்து ஆசானுக்கே வாங்கிக் கொடுத்து விடுவோம். அப்போதாவது அடுத்தவரை வசைபாடுவதை நிறுத்துகிறாரோ என்று பார்ப்போம்.

பின் குறிப்பு : மனுஷ்ய புத்திரனின் ஊழியின் தினங்கள் உண்மையிலேயே நல்ல கவிதை நூல். விருது கொடுத்தால் தவறில்லை. 

அதே போல கடந்த ஆண்டு வெளியான தோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய மௌனத்திப் சாட்சியங்களும் சாகித்ய அகாடெமி விருதுக்கு தகுதியான நூலே.

இந்த இரண்டு நூல்கள் பற்றி நான் எழுதிய அறிமுகத்தின் இணைப்புக்கள் கீழே உள்ளது.


1 comment:

  1. http://charuonline.com/blog/?p=5405

    i hope you may happy about the list.

    seshan

    ReplyDelete