Thursday, December 22, 2016

ரெய்டு நல்லதுதான்




தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டு நல்லதுதான்.

அது ஊழல் பேர்வழி பதுக்கி வைத்த பணத்தை கொண்டு வருவதற்காக மட்டும் என்றிருந்தால்.

தலைமைச் செயலாளரோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இதர அதிகார மையங்கள் மீதும் அது பாய்ந்தால்.

யாரெல்லாம் திருடர்கள் என்று அரசுக்குத் தெரியுமோ, அப்படிப்பட்டவர்கள் அனைவரது வீடுகளிலும் நடந்தால்.

750 கோடி ரூபாயில் மகளின் திருமணத்தை நட்த்திய ரெட்டியின் வீட்டில் நடந்தால்

50 சிறப்பு விமானங்களை தன் மகள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த கட்காரி வீட்டில் நடந்தால்.

அம்பானி, அதானி வீடுகளிலும் நடந்தால்.

இப்படி எல்லாம் இல்லாமல் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் நடந்தால்
ராம் மோகன் ராவ் போல நீங்களும் திருடர்களே.

உங்கள் ரெய்டின் நோக்கம் ஊழலுக்கு எதிரானது அல்ல, வேறு ஏதோ ஒப்பந்தத்திற்கானது.

ராம்மோகன்ராவை பதவி நீக்கம் செய்யுங்கள், சிறையில் தள்ளுங்கள். 

மற்றவர்கள் மீதும் உங்கள் அதிகாரம் பாயட்டும். அவர்களையும் உள்ளே தள்ளுங்கள்,

அவர்கள் உங்கள் கட்சிக்காரர்களாக, உங்கள் கஜானாவை நிரப்புகிறவர்களாக இருந்தாலும்.

ஆனால் அப்படியெல்லாம் நடக்கும் என்ற மூட நம்பிக்கை எனக்கில்லை. 

 

2 comments:

  1. something wrong. for my observation this person must have 1000 crore at least. that much worth person. the entire body made of corruption.

    Tamilnesan

    ReplyDelete
  2. ஊரை கொள்யைடித்த ராம மோகனராவ் இது வரை இரும்பு பெண், ஆளுமை கொண்ட தமிழக தலைவியின் பாதுகாப்பில் இருந்தாலும், அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்தது நல்லது. அதே போல் நாட்டில் உள்ள ஊரை கொள்யைடிக்கும் அனைத்து ராம மோகன ராவ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

    ReplyDelete