Tuesday, May 6, 2014

மத்திய அரசாக மாறிப் போனதோ மழை?


சின்னச் சின்ன தூறல்களாய்
மேலே விழுந்தன மழைத்துளிகள்.

இங்கேயும் இருக்கிறார்கள் நல்லோர்கள்
என எண்ணும் முன்பே
ஒரிரு நிமிடத்தில்
ஓரிரு துளிகளோடு
நின்றே போனது அதிசயமாய்
வந்து போன மழை.

முதலாளிகளுக்கு  கருணை பொழிந்து,
வறியோரை வாட்டி வதைக்கும்
மத்திய அரசைப் போல
மாறிப் போனதோ மழையும் கூட?
சிலரை குளிர வைத்து
பலரை புறக்கணித்து.....

இது காலையில் எழுதிய கவிதை.
மாலையில் நிலைமையே மாறிப் போனது.

நாளைய தலைப்புச் செய்தி

அங்கே என்ன பேரோசை?
யார் செய்வது இந்த ஆரவாரம்?
யாரை வரவேற்க இத்தனை கூட்டம்?
அலுவலகங்கள் கூட 
முடங்கியது ஏனோ?
அனைவரது முகத்திலும்
பரவசம்தானா?
இன்றைய இனிய தொடக்கம்
இனியும் தொடருமா என
வினவாதவர் எவரேனும் உண்டா?

குழப்பமாக பார்ப்போரே,
நாளைய தலைப்புச் செய்தி
உங்களுக்கு விடை தரும்
வேலூரில் கனத்த மழை என்று

No comments:

Post a Comment