Tuesday, May 20, 2014

கண்கள் பனித்தது, இதயம் இனித்தது





அரசியல் தலைவரின்
சாதுர்ய வார்த்தை அல்ல.
அன்பை உணர்ந்தவனின்
நெகிழ்ச்சியான குரல்.

முகமறியாமல், குரலறியாமல்
முக நூலால் மட்டும்
நட்பாய் இணைந்தவர்கள்,

இயக்கத்தின் தோழமையை
இங்கேயும் தொடர்பவர்கள்,
அன்றாடம் அளவலாவும்
அன்பு மிக்க சில நண்பர்கள்,

தூரத்தில் இருந்தாலும்
அருகாமையில் வசித்தாலும்
நெஞ்சிற்கு நெருக்கமாய்
இருக்கும் நண்பர்கள்,
உற்றார், உறவினர்

பிரியமான வார்த்தைகளால்,
மின்னஞ்சல், குறுஞ்செய்திகளாய்,
வண்ணமிகு
வாழ்த்து அட்டைகளில்
அன்பைப் பொழிந்த
அந்த தருணத்தில்
நான் மீண்டும்
புதிதாய் பிறந்தேன்.
முடிவு தந்த சோகத்தையும்
கொஞ்சமாய் மறந்தேன்.

வாய் நிறைய, நெஞ்சம் நிறைய
பாசத்தில் கலங்கிய கண்களோடு,
இதயத்தில் உள்ள இனிமையோடு
உண்மையாக சொல்கிறேன்
உமக்கெல்லாம் என் நன்றி.

 ( நேற்றைய தினம் எனது பிறந்த நாளுக்காக
முகநூலில் வாழ்த்தியவர்களுக்காக நன்றி
சொல்லி எழுதியது)

No comments:

Post a Comment