Saturday, May 17, 2014

ஆணவக்காரர்களுக்கு இதுதான் எங்கள் பதில்

இடதுசாரிகளின் தோல்விக்காக எள்ளி நகையாடுகிற,
ஆணவத்தோடு பேசிக் கொண்டிருக்கிற அத்தனை 
பேருக்கும் எங்களது பதிலாக  திரு மு.மேத்தாவின்
இக்கவிதையை அளிக்கிறேன். இறுதி வெற்றி எங்களுடையதே
என்ற நம்பிக்கையோடு இயக்கத்தின் பணி தொடரும்.



மண்ணில் பெருகிவரும்
       மாபெரிய கொடுமைகளை
கோடையிடி  தாக்குதலை 
      கூக்குரலின் ஆர்ப்பரிப்பை
கண்டு மனமொடிந்து
                மனமிடிந்து
என்றேனும் ஒரு நாள் - நான்
       இறந்து போவேனென்று 
எவரேனும் எதிர்பார்த்தால்
       அவர்கள்
ஏமாந்து போவார்கள்!

நான்...................
     மண்ணில் வேரோடி
          மாநிலத்தில் கால்பதித்து
வீசும் புயற் காற்றை
    விழும் வரைக்கும்
நின்றெதிர்ப்பேன் !
      நின்றெதிர்த்த முடிவினில் - நான்
நிலத்தில் வீழ்ந்து விட்டால்
      என் கன்றெதிர்க்கும் !
கன்றுடைய கன்றெதிர்க்கும்!!

8 comments:


  1. பிறருடைய பலவீனங்களை பெரிதுபடுத்தி
    அதில்மூலம் பயன்பெறமுயலாமல்
    தன் சுயபலத்தை பெருக்கிக் கொள்ள
    இடதுசாரிகள் முயலவேண்டும்
    இதுதான் தேர்தலில் அவர்களுக்கான
    படிப்பினை என்பது எனது கருத்து

    ReplyDelete
  2. இறுதி வெற்றி எங்களுடையதே.....BJP+


    Seshan

    ReplyDelete
  3. இறுதி வெற்றி வேண்டுமானால் சுயவிமர்சனம் தேவை.

    ReplyDelete
  4. Deposit poche...

    ReplyDelete
  5. சேஷன் சார், தேர்தலில் மோடி வெற்றி பெற்றது நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஒரு மோசமான ஆட்சியை தேர்ந்தெடுத்து விட்டோம் என்பதை நீங்களும் மற்றவர்களும் மக்களும் அனுபவித்து உணர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதே....

    ReplyDelete
  6. அனானி, டெபாசிட்தான் போச்சு, போராட்ட உணர்வு போகவில்லை. நாங்கள் எப்போதும் போல களத்தில் நிற்போம்.

    ReplyDelete