Saturday, May 10, 2014

வசந்தபாலன் நம்பிக்கையளிக்கிறார்

முந்தைய பதிவில் சொன்னது போல இயக்குனர் வசந்தபாலன்
தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவை பகிர்ந்து
கொண்டுள்ளேன். அதில் கடைசி வரி அற்புதம். 
Director's Touch



1989ம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் முதல்நாள் பேப்பரில் நண்பகல் 12மணியிலிருந்து 1 மணிக்குள் வரும்.
முதல் மதிப்பெண் பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்,
அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் தான் மார்க் லிஸ்ட்
நோட்டிஸ் போர்டில் ஒட்டப்படும்,

காலையிலே என் மார்க்கை பார்த்து விட்டேன்.குறைவான மார்க்.
அப்பா டாக்டர் இஞ்சினியர் bsc agri என்ற கனவில் இருந்தார்.
குறைவாக மார்க் எடுத்தவர்கள் எல்லாம் ஒரு குரூப்பாய் சேர்ந்து கொண்டு கூடி கூடி பேசினோம்,வயிறு கலக்கியது,
மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு போனால் அப்பா கேட்பார்
அதனால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போகவில்லை.
மாலை கசிய அனைத்து பையன்களும் வீட்டிற்கு சென்றார்கள்.
இரவு 8 மணிவரை தாமதித்து விட்டு
மெதுவாக அழுத மூஞ்சியுடன் வீட்டிற்கு போனான்.
அப்பா மார்க் சீட்டை பார்த்தார்.
எதுவும் பேசவில்லை.
ஏன் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரலை இதுக்குத்தானா....
வசந்தா இவனுக்கு சாப்பாடு போடு என்றபடி வெளியே போய்விட்டார்.
இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை.
அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டார்கள்.
இவன் கதை கவிதைன்னு சுத்தறப்பவே தெரியும்
இவ்வளவுதான் மார்க் வாங்குவான்னு...
ஏதோ புண்ணியத்துக்கு பாஸ் ஆனானேன்னு உறங்கிப்போனார்,
எனக்கு தான் அழுகை அழுகையாய் வந்தது.ஒரு தந்தையின் ஆசையில் மண்ணள்ளி போட்டோமுன்னு.....


நண்பர்களே அத்தனை குறைவான மார்க் வாங்கி நானெல்லாம் இன்று உருபட்டுவிடவில்லை.....
பெயிலாக போனதற்கோ மார்க் குறைவாக வாங்கியதற்கோ கவலைபடாதீர்கள்.
உங்கள் சக்தியை வேறுபக்கம் கூர்மையாக்கி கொள்ளுங்கள்.
இடைவிடாது உழையுங்கள்.
உழைப்பு திறமை நேர்மை பொறுமை கவனம் வெற்றியை தேடி தரும்.
வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் தளரவிடாதீர்கள்.
யானை வாழற காட்டுல தான் எறும்பும் வாழுது

2 comments:

  1. வசந்த பாலனின் கூற்று அனைவரும் அறிந்த உணரவேண்டிய ஒன்று.
    யானை வாழும் காட்டில்தான் எறும்பும் வாழ்ந்தாக வேண்டும்.

    ReplyDelete