Friday, April 7, 2023

விஷமோகனை எதுவும் மன்னிக்காது

 

விஷ மோகன் மீண்டும் ஒரு விபரீத சர்ச்சையை தூண்டியுள்ளார்.

அவருடைய செல்பி கேள்வி பதில் பகுதியில் கோழை சாவர்க்கரை உயர்த்திப் பிடிக்க பல நச்சுக்களை கக்கியுள்ளார்.

"சாவர்க்கர் அளவிற்கு மகாத்மா காந்தியை பிரிட்டிஷார் துன்புறுத்தவில்லை.

சாவர்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மூவரையும் ஒன்றாக, ஒரே மாதிரியாகத்தான் பார்க்க வேண்டும். மூவரும் சமம். இவர்களில் யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்தியா பேரழிவை சந்தித்திருக்கும்."

இவை மட்டுமல்ல இன்னும் ஏராளமான பிட்டுக்களை அள்ளி வீசியுள்ளார். 

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பகத்சிங்கிற்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற நாடாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.

மத வெறியை தூண்டி, பிரிவினைக்கு காரணமாக இருந்து மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிய, பிரிட்டிஷாரிடம் மண்டியிட்ட கோழை சாவர்க்கரை இரு பெரும் வீரர்களோடு ஒப்பிட்ட அயோக்கியன் ஜெயமோகனை, வரலாறும் மன்னிக்காது, சமூகமும் மன்னிக்காது. புளிச்ச மாவு பாக்கெட் கூட மன்னிக்காது. 


No comments:

Post a Comment