Tuesday, April 4, 2023

கேடியை காப்பாற்றாதீர் கேஜ்ரிவால்

 


"வெறும் நரேந்திரா"  பட்டப் படிப்பு  படிக்காமல் படித்ததாக பொய் சொல்லி உள்ளார் என்பதுதான் பிரச்சினை. அந்த மோசடிதான் விவாதப் பொருள்.

ஆர்.டி,ஐ போட்டு அபராதம் விதிக்கப்பட்ட கேஜ்ரிவால் இப்போது கேடியின் மோசடி பற்றி பேசுவதற்கு பதிலாக

"ஒரு பிரதமர் உயர் கல்வி படித்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முடிவுகள் எடுக்க முடியும்"

என்று பேசத் தொடங்கியுள்ளார். 

"பிரதமர், முதல்வராக உயர் கல்வி படித்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கே இருக்கிறது? படிக்காதவர்கள் சிறப்பாக செயல்படவில்லையா?"

என்று விவாதத்தை திசை திருப்பும் வேலை இது.

இது கேடிக்குத்தான் பலனளிக்கும். கேஜ்ரிவாலின் நோக்கமும் அதுதானோ என்னமோ!

"வெறும் நரேந்திரா" கல்வி விஷயத்திலும் ஒரு மகா பொய்யன் என்று மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் மிகவும் முக்கியம். 

பிகு:



 தான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று வேறு கதை அளந்துள்ளது இந்த பொய் ஜென்மம்.

No comments:

Post a Comment