Friday, March 24, 2023

ராமர், கிருஷ்ணர், மோடி

 


நேருக்கு நேராக போரிட்டால் வெல்ல முடியாதென்பதற்காக வாலியை மறைந்திருந்து கொன்றவர் ராமர்.

பீஷ்மரின் வில்லை மௌனமாக்க சிகண்டி எனும் திருநங்கையை அர்ஜூனன் தேரில் அமர வைத்து.

அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று முழக்கமிட்டு துரோணரை தேரில் நிராயுதபாணியாக அமர வைத்து

போருக்கு முன்பே கர்ணனின் கைகளை கட்டிப் போடக்கூடிய விதத்தில் வரங்களை வாங்க வைத்து

பாண்டவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தது கிருஷ்ணன்.

இவற்றையெல்லாம் சொன்னது ராமாயணமும் மகாபாரதமும்தான்.

ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதாக சொல்லிக் கொள்ளும் மோடியும் அவர்களின் மோசடி நடைமுறையை கையிலெடுத்து ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்து எம்.பி பதவியை பறித்து விட்டார்.

மொத்தத்தில் மூவரிடமும் நேர்மையில்லை.

நேரடியாக மோத துணிவில்லாமல் ஒளிந்து கொண்டு மோதுபவர்கள் எல்லோருமே கோழைகள். இதிலே 56 இஞ்ச் மார்பென்ற பீற்றல் வேறு.

பாகுபலி படத்தின் இடைவேளையில் மக்கள் மனதில் பல்வாள் தேவனை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் பாகுபலி போல காட்சியளிக்கிறார் ராகுல் என்பதுதான் யதார்த்தம்.

நடப்பதும் நல்லதற்குத்தான் . . .

 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அப்படியாடா இரண்டு ரூபாய் சங்கி பிச்சைக்காரா?

      Delete
  2. படிக்காத தற்குறிகளிடம் விவாதம் பலன் அளிக்காது

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் உன்னை மாதிரியான சங்கிகளோடு நான் விவாதிப்பதில்லை

      Delete