Saturday, March 18, 2023

"புலி" யால் சிக்கிக் கொண்டார்கள்

 


அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு புலிகள் சரணாலயத்தில் நீண்ட நாட்கள் கண்ணில் படாத ஒரு புலியை தேட வைத்த காமெராக்களில் அது தென் பட்டுள்ளது.

அதை தேடி வனத்துறை காட்டில் அலைய கிடைத்தது புலி அல்ல,

பிறகு?

யாரும் வர முடியாத காடு என்று அரசு நினைத்திருக்க, மரக் கொள்ளையர்களோ அங்கங்கே மர டெப்போக்களையே வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப் பட்ட மரங்களை வெளியே கொண்டு வர வாகனத்தில் ஏற்றி வைத்த நிலையில் பிடித்துள்ளார்கள்,


நல்ல வேளை, காட்டை முழுதுமாக மொட்டையடிக்கும் முன்பாக புலி உதவி விட்டது. 

No comments:

Post a Comment