Friday, March 31, 2023

ராம நவமி விபத்து: யார் காரணம்?

 


மத்தியப் பிரதேசம் இந்தோரில் நேற்று ஒரு கோவிலில் ராம நவமியை ஒட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் இது வரை முப்பத்தி ஐந்து பேர் இறந்துள்ளார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

எப்படி நடந்தது இந்த விபத்து?

முதலில் அதனை கோயில் என்று சொல்வதே தவறு.

ஐம்பது அடி ஆழமுள்ள பழைய பெரிய கிணறு. கிணறையும் கிணற்றை சுற்றியுள்ள இடத்தையும் கோயிலாக மாற்றி விட்டார்கள்.

 கிணற்றை மூடினார்களா?

 ஆம். மூடினார்கள்.

 எப்படித் தெரியுமா?

 முற்றிலும் மணல் போட்டு, கிணறை நிரப்பி அதன் மீதெல்லாம் தளம் அமைக்கவில்லை.

 பின் எப்படி?

 நிமிர்த்து வைக்கப் பட்ட இரும்பு கம்பிகள் மீது காங்க்ரீட் ஸ்லாபுகள் போட்டு மூடி விட்டார்கள். கிணற்றின் உள் பகுதி அப்படியேதான் இருந்துள்ளது.

 பக்தர்களின் நெரிசல் தாங்காமல் தரை உள்ளே போக நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே விழுந்து விட்டனர்.

 விபத்து நிகழ்ந்து ஒரு மணி நேரமாகியும் மீட்புப் பணி தொடங்கவில்லை. ஆம்புலன்ஸ் வரவில்லை.

 கிணறை மூடாமல் கோயில் கட்டாதவர்கள், அதற்கு அனுமதி கொடுத்தவர்கள், இந்த முறையற்ற கட்டுமானத்தை கோயில் என்று நம்பி வந்த பக்தர்கள் என அனைவருமே இந்த விபத்துக்கு காரணமானவர்கள்.

 

கும்பகோணம் தீ விபத்து பள்ளிகளின் பாதுகாப்பு பற்றிய விவாதத்தை உருவாக்கியது. வழிபாட்டுத் தளங்களின் (அனைத்து மதங்களையும் சேர்த்தே சொல்கிறேன்) பாதுகாப்பு பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது.

 

பிகு: இலங்கையில் ஈஸ்டர் அன்று சர்ச்சுகளில் வெடி குண்டு வெடித்து ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்ட போது “ஏசப்பா” என்று தலைப்பு கொடுத்த தின மலர் இந்த சம்பவத்துக்கு என்ன தலைப்பு கொடுத்தது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment