Tuesday, March 7, 2023

புலிகளுக்கும் நாய்த் தொல்லை

 



மனிதர்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்குக் கூட நாய்த்தொல்லை ஏற்பட்டுள்ளது. இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

 

இரண்டு மாதம் நிரம்பிய நான்கு புலிக்குட்டிகளை அதன் தாய்ப்புலி விட்டுப் போய்விட்டது. ஆந்திர மாநில பெத்த கும்மாடபுரம் என்ற கிராமத்தில் இது நடந்துள்ளது.

 

கைவிடப்பட்ட குட்டிப்புலிகளை தெரு நாய்கள் தாக்கத் தொடங்கி விட்டன. பிறகு கிராம மக்கள்தான் நாய்களை துரத்தி விட்டு வனத்துறைக்கு தகவல் சொல்லி அக்குட்டிப்புலிகளுக்கு பாதுகாப்பாய் இருந்துள்ளன.

 

இப்போது அப்புலிகளை பராமரிக்க ஏதாவது மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பலாமா என்று வனத்துறை திட்டமிடுகிறதாம்.

 

நாய்க்கு செக்கும் தெரியாது, சிவ லிங்கமும் தெரியாது என்பார்கள். அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

 

குரைப்பதும் குதறுவதும் தெரு நாய்களின் குணாம்சம். அவற்றுக்கு நான்கு வயது சிறுவனும் ஒன்றுதான், நான்கு குட்டிப்புலிகளும் ஒன்றுதான்.

 

தெரு நாய்களை அடித்துக் கொல்லாதவரை அது கண்டவரையெல்லாம் கடித்துக் கொண்டுதான் இருக்கும்,

No comments:

Post a Comment