Wednesday, April 29, 2015

அர்த்தம் மாறிய மருதகாசி பாடல்

 போதையால் வீழும் தமிழகம்

ஓரிரு மாதங்கள் முன்பாக எங்கள் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உயரதிகாரி திரு ப. இசக்கி ராஜன், கீழேயுள்ள காணொளியை மிகுந்த கவலையோடு பகிர்ந்து கொண்டார்.


டாஸ்மாக் மூலம் தமிழகத்தின் இளைஞர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இரண்டு கழகங்களுமே பொறுப்பு.

இந்த காணொளியை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு இடம் ரொம்பவும் கச்சிதமாக பொருத்தப்பட்டு கோபத்துக்கு இடையிலும் கூட சிரிப்பை வரவழைத்து விடுகிறது.

"மண்ப்பாறை மாடு கட்டி"  பாடலை அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய போது  தன் வரிகள் இப்படியும் பயன்படும் என்பதை மருதகாசி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

1 comment:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே
    நெஞ்சு பொறுக்குதில்லையே

    ReplyDelete