Tuesday, September 16, 2014

பாஜக பின்னடைவு மகிழ்ச்சியும் தருகிறது, கவலையும் கூட

இடைத்தேர்தல்களில் பாஜக சந்தித்துள்ள பின்னடைவு  ஒரு புறம் எனக்கு  மகிழ்ச்சியளிக்கிறது. ஆசை அறுபது நாள் கதையாக மோடி மீதான மோகம் மக்களுக்கு குறைந்துள்ளது என்பதன்  அடையாளம்  இது. வெற்று முழக்கங்கள்  வெகு காலத்திற்கு நிற்காது. 

கவலயளிப்பதற்கும் காரணம்  உண்டு.

க்லவரங்கள் தொடர்ந்தால் வெற்றி தொடரும் வெளிப்படையாகவே கூறிய மனிதன் அமித் ஷா. தேர்தல் வெற்றிக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே   இறங்கக் கூடியவர்கள்தான் காவிக் கூட்டம். 

அதனால் தோல்வியை சரி செய்ய மீண்டும் மக்கள் மத்தியில் பிரிவினையை  தூண்டி விட கலவரங்களை  உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ஆகவே மக்களும் எதிர்க்கட்சி  ஆளும் மாநில அரசுகளும் விழிப்போடு இருந்திட வேண்டும். 

No comments:

Post a Comment