Monday, September 15, 2014

மழையூராக மாறிய வேலூரில் இரண்டு நாட்களாக ஒரு சவால்

வேலூரை வெயிலூர் என்று கிண்டல் செய்தவர்களுக்கு ஒரு முக்கியமான  தகவல். 

நேற்றும் இன்றும் வேலூரில் மழை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மாலை 6.15 மணிக்கு தொடங்கிய மழை இந்த நிமிடம் வரை அடித்துப் பெய்து கொண்டிருக்கிறது.

இதில் என்ன சவால் என்று கேட்கிறீர்களா?

எனது பொறுமைக்கும் மழைக்குமான சவால்தான்.

நேற்று மதியம் ஒரு திருமணம் முடிந்து வருகையில் மழை தொடங்கியது. அலுவலகம் அருகில் வந்ததால் அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தேன். மழை கொஞ்சம் குறைந்தது போலிருந்ததால் வீட்டிற்கு புறப்பட்டு ஒரு அரை கிலோ மீட்டர் கூட கடந்திருக்கவில்லை. மீண்டும் கன மழை தொடங்கி ஒரு நிமிடத்திற்குள் முழுமையாக நனைந்து விட்டேன்.

பிறகென்ன்ன, மழையை ரசித்தபடி நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்து விட்டேன்.

இன்றும் அப்படித்தான்.

பாதி வழியில் மழை பிடித்துக் கொண்டது.

எனது பொறுமைக்கும் மழைக்கும் மீண்டும் சவால்.

அரை மணி நேரத்திற்கு மேல் பொறுமை நீடிக்கவில்லை. சட்டைப் பையில்  இருந்த பணம், தொலைபேசி எல்லாவற்றையும் உணவு எடுத்துச் செல்லும் பையில் பத்திரப்படுத்தி மீண்டும் மழையில் நனைந்து கொண்டு வீடு திரும்பினேன். 

இன்றும் மழையே வென்றது.

வீடு திரும்பி, தலையை, உடலைத்  துடைத்துக் கொண்டு,  சூடாக காபி சாப்பிட்டு, இதோ இந்த பதிவை எழுதும் நொடி வரை மழை நன்றாக பெய்து கொண்டுதான் இருக்கிறது. 

வேலூர் மக்களின் மனம் கவர்ந்த விருந்தினராய் மழை மகிழ்ச்சியளித்துக் கொண்டிருக்கிறது. 

போதாது போதாது என்று ஏங்க வைக்கிறது.

எனென்றால் வேலூரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம் அப்படி.
 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete