Tuesday, January 17, 2023

இறந்த பின்னும் மக்களுக்காக

 


நேற்று காலமான வேலூர் மாவட்டத்தின் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.சாவித்திரி அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்து நேற்று எழுதியிருந்தேன்.

மக்களுக்கான அவரது சேவை அவர் மறைந்த பின்னும் தொடர்கிறது.

ஆம்.

அவர் மருத்துவ ஆய்வுகளுக்காக அவர் தன் உடலை தானம் செய்திருந்தார். 

அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இன்று கலந்து கொண்டது அவர் மீது தோழர்கள் கொண்ட நேசத்தின் அடையாளமாக அமைந்திருந்தது.




வாழும் போதும் வாழ்க்கைக்குப் பின்பும் வாழ்வை அர்த்தமாக்கிய தோழர் ஆர்.சாவித்திரி அவர்களுக்கு செவ்வணக்கம். 

No comments:

Post a Comment