Wednesday, January 4, 2023

ஆட்டுக்காரன் வீடியோ அருமை

 




எந்த உள் நோக்கமும் இல்லாமல் நிஜமாகவே ஆட்டுக்காரனை பாராட்டி எழுதுகிற பதிவு,

கீழே உள்ள காணொளியை பாருங்கள். ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவில் பார்த்தது.


ஆட்டுக்காரன் காக்கிச்சட்டை போட்டிருந்த போது பேசிய பேச்சு. கன்னடமாக இருந்தாலும் புரிந்து கொள்ளலாம்.

"சிருங்கேரி சங்கர மடத்தின் மீது திப்பு சுல்தானின் படை தாக்குதல் நடத்தியது. குரு கடிதம் அனுப்புகிறார். எனக்கு தெரியாமல் நடந்த விஷயம் இது. நானே நேரில் வந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று போகிறார். குருவை பார்த்து மன்னிப்பு கேட்கிறார். 200 க்கும் மேற்பட்ட கிராமங்களை மடத்துக்கு எழுதி வைத்து அதன் மூலம் வரும் வருமானத்தை பயன்படுத்தச் சொல்கிறார். அது மட்டுமல்ல, ரூபி, மரகத மணி, டைமண்ட் வைத்த கிரிடத்தை தருகிறார். அதை இப்போதும் நவராத்திரியின் போது அம்மனுக்கு அணிவிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்கு தங்கம் நிறைய தானம் செய்துள்ளார்கள். இப்போதும் மாலை ஆறு மணிக்கு எடுக்கும் ஆரத்திக்கு திப்பு ஆரத்தி என்றே பெயர்.

இதெல்லாம் வரலாறு. வரலாற்றை மாற்ற விடக்கூடாது. இதுதான் மதச் சார்பின்மை, நம் இந்தியாவின் சிறப்பு."

இந்த உரையை யாரும் மோடிக்கோ, யெடியூரப்பாவிற்கோ, கர்னாடக பொறுக்கி என்.பி தேஜஸ்விக்கோ அனுப்பி ஆட்டுக்காரனை பிரியாணியாக்கி விடாதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete