Friday, January 20, 2023

மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பில்லாத . . .


 புது டெல்லியில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனைக்கு முன் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக உள்ள ஸ்வாதி மாலிவால் என்பவர் தன் ஆணைய ஊழியர்களுடன் அதிகாலை ஆய்வுக்குச் சென்ற போது அவரை ஒருவர் பாலியல் சீண்டல் செய்து காரில் இழுத்துப் போக முயன்றுள்ளான். பின்பு போலீஸ் அவனை கைது செய்தது என்பது வேறு விஷயம்.

மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பில்லாத நிலையில்தான் தலைநகர் டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது.

இதற்கு அமித் ஷா என்ன பதில் சொல்லப் போகிறார்?

பிகு: அரவிந்த் கேஜ்ரிவால்தானே டெல்லியின் முதல்வர், அமித் ஷா ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று சங்கிகள் யாரும் கேள்வி கேட்டு வர வேண்டாம். டெல்லியின் காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கூட தெரியாத நீயெல்லாம் பின்னூட்டம் போடுகிறாயா என்று நான் திட்டி விடுவேன். 

No comments:

Post a Comment