Friday, December 17, 2021

ஜெமோவே சீமானின் முன்னோடி

 


அன்பின் ராமன்,

ஜாதி ஆணவக் கொலைகளை சீமான் "குடிப் பெருமைக் கொலைகள்" என்ற பெயரில் அழைக்கப் போவதாக சொல்கிறாரே! வெறுப்போடு அணுக வேண்டிய ஒரு விஷயத்துக்கு பெருமித முலாம் பேசுகிறாரே,  சீமான் தான் முதன் முதலில் இவ்வாறு செய்கிறாரா அல்லது அவருக்கு முன்னோடி யாராவது இருக்கிறார்களா?

அன்புடன்

இணைய மொண்ணை 


அன்பின் இணைய மொண்ணை,

இது போன்ற மோசமான செயல்களுக்கு புளிச்ச மாவு ஆஜான் தவிர வேறு யார் முன்னுதாரணமாக இருக்க முடியும்?

இந்திய வங்கிகளை கோடிக்கணக்கில் ஏமாற்றி இங்கிலாந்துக்கு ஓடிப் போன விஜய் மல்லய்யாவை மோசடிப் பேர்வழி என்று அழைக்கக் கூடாது. தோற்றுப் போன தொழில் முனைவர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உபதேசித்தவர்.

அது போல ஜாதிய சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வருவதை "ஜாதிசார் அழகியல்" என்று வர்ணித்தவர்.

அவர்தான் சீமானின் முன்னோடி.

இருவருமே வார்த்தைகள் மூலம் விஷம் கக்குபவர்கள். .

அன்புடன்

ரா

பிகு: ஆஜான் பாணியில் செல்ஃபி கேள்வி பதில்.

இது செல்ஃபிதான் என்று நானே சொல்லி விட்டேன். ஆஜான் சொல்ல மாட்டார். அந்த அளவுக்கு அறம் மிக்கவர் அவர். 

No comments:

Post a Comment