Monday, December 6, 2021

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை . . .

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்.  அதனை மட்டும் நினைவு கூற முடியாமல் சங்கிகள் இந்நாளை கருப்பு நாளாக மாற்றி விட்டார்கள்.

 ஆம்.

 டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளாகவும் மாறி விட்டது. இந்த நாளில் அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. வீட்டிற்கு வெளியே வந்தால் அங்கங்கே தென் படும் காக்கிச்சட்டைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன.

 மசூதி இடிக்கப்பட்டது மட்டுமல்ல கொடுமை!

அந்த இடம் ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது மட்டுமல்ல கொடுமை!

 மசூதி இடிப்பு ஒரு குற்றச்செயல் என்று சொல்லப்பட்ட தீர்ப்பில் அந்த குற்றச்செயலை செய்தவர்களை, குற்றத்தை தூண்டியவர்களை, குற்றத்திற்கு தலைமை தாங்கியவர்களை விடுதலை செய்தது மிகப் பெரிய கொடுமை.

 அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் ஓர் நினைவு நாளன்று நிகழ்ந்த ஒரு அராஜகத்தை செய்தவர்கள்  இன்று வரை  எந்த தண்டனையும்  இல்லாமல் வசதியாக இருப்பதும் குற்றச்செயல் என்று சொல்லி விட்டு அவர்களை விடுதலை செய்தவர், அந்த குற்றவாளிகளின் தயவில் எம்.பி யாக இருப்பதும் மிகப் பெரிய முரண் நகை.

 

No comments:

Post a Comment