Friday, October 19, 2012

மின்சார வெட்டா? யாருய்யா சொல்றது, படத்தைப் பாரு...




தமிழகம் வரலாறு காணாத மின் வெட்டால் தவிப்பதுதான் தமிழகம் எங்கும் பேச்சு..  அப்படி  மின் வெட்டு இருக்கிறதா? மின்சாரத் தட்டுப்பாடா என்று  கேட்கக் கூடிய விதத்தில் எங்கள் சத்துவாச்சாரி பகுதி உள்ளது.

வியப்பாக உள்ளதா?
அதிர்ச்சியாக உள்ளதா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள், எங்கள் பகுதியில் சாலை விளக்குகள் அணைக்கப்படவில்லை என்ற அவலம் தெரியும்.


காலை 6.30 மணி முதல் 9 மணி வரை என் மகன் எடுத்த படங்கள். தகவல் தெரிவிக்கலாம் என்றால் மாநகராட்சி அலுவலகத்தின் தொலைபேசி எண் தெரியவில்லை. கண்டு பிடித்து போன் செய்தால் எடுப்பதற்கு யாரும் இல்லை.

மின் வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி செய்தால் எப்போதும் போல எடுக்கவேயில்லை.

9.50 க்கு அலுவலகம் கிளம்பும்போதும் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தது.  எப்போது அணைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

மக்களுக்கு எப்போது தேவையோ அப்போது தெரு விளக்கு எரியாது.
பகல் வேளையில் எரிந்து கொண்டு இருக்கிறது.

அவ்வளவு லட்சணமாக நிர்வாகம் உள்ளது.

1 comment: