Monday, October 15, 2012

வழி மறித்த உளவுத்துறை



அது 1998 ம் ஆண்டு. ஹைதராபாத்தில் எங்கள் 
சங்கத்தின்
அகில இந்திய மாநாடு. மாநாட்டின்
 இறுதி நாளில்    மாநாடு  முடிய     மதியம் மூன்று 
மணிக்கு மேலாகி விட்டது. அதற்குப்  பின்பு 
 மதிய 
உணவை முடிக்கையில் மாலை
 நான்கு மணி.   ஹைதராபாத் வரை வந்து
சார்மினார் பகுதியில் வளையல்
வாங்காவிட்டால் குடும்பத்தில் குழப்பம்
 வரும் என்று சில தோழர்கள் சொல்ல
 எங்கள் கோட்டத்திலிருந்து வந்த ஒரே
மகளிர் தோழரும் வழிமொழிய
ஆட்டோக்கள் பிடித்து சார்மினார்
சென்றோம். மாலை ஆறு முப்பதிற்கு
 எங்கள் ட்ரெய்ன். அவசரம்
அவசரமாக வாங்க வேண்டியதை
 எல்லாம் வாங்கி தங்குமிடத்திற்கு
வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு
 செகந்தராபாத் ரயில் நிலையம்
விரைகிறோம். பெண் தோழர் தங்கியிருந்த
 வேறு இடத்திலிருந்து அவருடைய
பொருட்களோடு வர ஒரு தோழரை

அனுப்பி விட்டோம்.

நாங்கள் ரயில் நிலையம் வருகையில்

 பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது.
 மற்றவர்கள் அனைவரும் சென்னை
 செல்ல நான் மட்டும் என் அக்கா
வீட்டிற்குச்செல்ல விஜயவாடா

 செல்ல வேண்டும். 

ரயில் புறப்பட்டு விட்டது, இரு தோழர்கள்
மட்டும் வந்து சேரவில்லை. 
பதட்டம் 
அதிகரித்துக்கொண்டே இருந்தது. ட்ரெய்ன்

 வேகம் எடுப்பதற்கு முன் வந்து
சேர்ந்தார்கள். ஏதோ ஒரு  பெட்டியில்

 அவர்களை   ஏற்றி  விட்டேன். அவர்கள்
 வந்த ஆட்டோவிற்கு பணம்
தரவில்லை என்றும் என்னைக்
 கொடுக்கச்சொல்லி விட்டு அவர்கள்
சென்று விட்டனர்.

அந்த ஆட்டோ தொழிலாளியின் முகத்தை
 நினைவில் கொண்டு வந்து
 செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு
 வெளியில் சுற்றி சுற்றி தேடிக்
 கொண்டிருந்தேன். இத்தேடல் அரை மணி
 நேரத்திற்கும் மேல் நீடித்தபோது
 திடீரென ஒரு கரம் வழி மறித்து
 அதிகாரத்தோடு யார் நீ என
ஆங்கிலத்தில்  கேட்டது. அதே திமிரோடு

 அதே கேள்வியை நானும் கேட்டேன்.
 அந்த உருவம் ஒரு அடையாள
அட்டையை நீட்டியது.
ஆந்திர மாநில
உளவுத்துறையின் டி.எஸ். பி அவர்.

நான் யாரென்றும் 
 ரயில் நிலையத்திற்கு
 வெளியே அலைந்ததன் காரணத்தையும்
 விளக்கிய பின் அவர் ஒரு தகவலை 
 சொன்னார்.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் 
வெடிகுண்டு இருப்பதாக ஒரு 
புரளி வந்ததால் ஐம்பதிற்கும் மேற்பட்ட
 காவலர்கள் மப்டியில்  உள்ளதாகவும் 
அங்கே, இங்கே என அலைந்து

 கொண்டிருந்த என் மீது சந்தேகம் 
ஏற்பட்டதாகவும் கூறிய அவர்

என்னுடைய ட்ரெய்ன் 
வரும்வரை 
ஒரே இடத்தில் அமர்ந்து 

கொள்ளுமாறும் கூறினார்.
எட்டு மணி முதல் பத்து மணி வரை
 அசைவே இல்லாமல் அமர்ந்து
விட்டு என்னுடைய வண்டி வந்ததும் 
புறப்பட்டேன். 

. அந்த ஆட்டோ
தொழிலாளிக்கு பணம் தரவில்லை
 என்பது மட்டும் இன்றுவரை மனதை
 உறுத்திக் கொண்டே உள்ளது.
( முன்பு எழுதிது மீண்டும் இங்கே) 


No comments:

Post a Comment