Wednesday, October 31, 2012

காங்கிரஸ்காரங்களுக்கு ரோஷம் வந்துடுச்சுங்கடோய்..... ஒரு காமெடிக் கடிதம்..

இளைஞர் காங்கிரஸ்காரர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் இது.
தமிழ்நாட்டின் சீர்கேட்டிற்காக ஜெ வை ஏராளமான கேள்விகள்
கேட்டுள்ளார். அதற்கு சிலர் பதிலளித்துள்ளதே மாபெரும் வெற்றி
என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார். 

ஜெ வை கேள்வி கேட்பது சரி,
ஆனால் அதற்கான அருகதை காங்கிரஸ் கட்சி ஆட்களுக்கு
உண்டா?

இந்தியாவை பெரும்பான்மையான காலம் ஆட்சி செய்து
நாசமாக்கிய பெருமை அதற்குத்தானே உண்டு.

இதே போன்ற கடிதம் மன்மோகன்சிங்கிற்கும் அந்த
நண்பர் அனுப்பி வைப்பாரா?

அன்னை சோனியா, இளைய தளபதி ராகுல் பற்றியெல்லாம்
எழுதியுள்ளது நல்ல நகைச்சுவையாக உள்ளதால் அந்த
மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு கீழே.




பெரும் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒரு திறந்த மடல்!
தமிழ்நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் எங்கள் மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

நேற்று உங்கள் தலைமையில் நடக்கும் அலங்கோல தமிழக அரசு, அன்னை சோனியா வழி காட்டுதல் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்க் தலைமையிலும் நடக்கும் சீரிய சிறப்பான ஆட்சி மீது சுப்ரீம் கோர்டில் மின்சாரம் கொடுக்க வழக்கு தொடர்ந்துள்ளது. உங்கள் நிர்வாகத்திறமையின்மையை மறைக்க வருங்கால மக்களவை தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க நீங்கள் நடத்தும் நாடகம் என்பது தமிழ்நாட்டில் கை சூப்பும் குழந்தைக்கு கூட புரியும்.
 
நியாயமாக பார்த்தால் தமிழ் நாட்டு மக்கள்தான் தமிழக அரசின் மீதுதான் வழக்கு போட வேண்டும்
 
1. தமிழகம் முழுவதும் ஒரே மின் கட்டணம்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சென்னைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேர மின் வெட்டும், இதர மாவட்டங்களுக்கு பத்து முதல் பதினைந்து மணி நேர மின் வேட்டை அமல்படுத்தும் தமிழக அரசின் மின் துறை மீது பொதுமக்கள் வழக்கு தொடுத்தால் என்ன தவறு? ஒரு மாநிலத்துக்குள் சரியான மின்பகிர்வை செய்யாத நீங்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் என்ன கதி நடக்கும்?
 
2. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வாகன விபத்துக்கள். பள்ளி குழந்தைகள் அடிக்கடி விபத்தில் இறப்பது தினசரி செய்தி. உங்களுக்கு தெரியுமா? தமிழ் நாடுதான் சாலை விபத்தில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. தமிழ் நாட்டை விட இரு மடங்கு வாகங்கள் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இவ்வளவு விபத்துக்கள் இல்லை. கடந்த வருடம் சாலை விபத்தில் தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 15, 000 பேர். கடந்த ஞாயிறு அன்று நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு இளைஞர்கள் விபத்தில் இறந்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த சுயம்பு மகன் ராஜா 22. லிங்கசாமி மகன் ராஜேஷ் 23 , நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் முத்துக்குமார் 27, ராஜகணேஷ் 29 ஆகியோர் தான் அந்த நால்வர். ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளில் இத்தனை பேர் இறக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் என்ன நிலைமை என்று மக்கள் கணக்கு போட்டு கொள்வார்கள். இப்படி இளைஞர்கள், குழந்தைகள் கொத்து கொத்தாக இறப்பது தமிழக அரசின் போக்குவரத்து துரையின் அலட்சிய போக்கே காரணம். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக கல்லா கட்டி கொண்டுள்ளனர். இப்படி அலட்சியமாக மக்களை சாலை விபத்தில் சாகடிக்கும் தமிழக போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் மீது பொது மக்கள் வழக்கு தொடரலாமா?
 
3. இதே ஞாயிறன்று உங்கள் சுகாதார துறை அமைச்சர் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். டெங்கு காய்ச்சல் பரவக்காரணமான சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மீதும், சுகாதரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி முனுசாமி மீது வழக்கு தொடரலாமா?
 
எங்கள் அன்னை சோனியா பிரதமர் பதவியை தூக்கி எறிந்தவர். எங்கள் தலைவர் ராகுல் காந்தி பத்தாண்டுகளாக அமைச்சர் பதவி நாடாமல் கட்சி நலனை மனதில் கொண்டு உழைப்பவர். ஆனால் அரசியல் விபத்தில் பதவிக்கு வந்த நீங்கள் பதவி வெறி பிடித்து அலைவதுதான் உங்கள் வரலாறு. உங்கள் கொத்தடிமை அமைச்சர்கள் கூட்டம் (மன்னிக்கவும் இப்படித்தான் பல பத்திரிகைகள் சொல்கின்றன) ஏதாவது பதவி கிடைக்க எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தது குறித்து பத்திரிகைகள் புகழ்ந்து எழுதியுள்ளன. எங்கள் தலைவர் ராகுல் காந்தி இளைஞர்களாக திறமையுள்ளவர்களாக தேடிக்கண்டுபிடித்து பல்லம் ராஜு, சிந்தியா, சச்சின் பைலட் ஊக்கம் செய்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்.
 
அடிக்கடி உங்கள் கட்சி பிரமுகர்கள் உங்களை பிரதமராக தானாகவே அறிவித்து அரசியல் வேடிக்கை செய்கிறார்கள். உங்கள் கதை புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதைதான். தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்தை சரியாக நிர்வாகம் செய்ய முடியாத நீங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய நினைப்பது வேடிக்கை. சமச்சீர் கல்வியில் வழக்கு, திமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்கு என்று தொடரும் அதிமுக அரசு ஓட்டு போட்ட மக்கள் மீது வழக்கு தொடராதது ஒன்றுதான் பாக்கி. போகிற போக்கில் அதையும் நிறைவேற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இளைஞர்கள் கட்சி சார்பில் நடக்கும் டிவிக்கள் வைத்தோ, பத்திரிக்கைகள் வைத்தோ அரசியல் தெரிந்து கொள்வதில்லை. இணைய தளத்தில் அரசியல் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள். எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுரைப்படி, இணைய தளத்தில் அரசியல் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்களை கவருவோம். அதிமுக அரசின் பொய் பிரச்சாரங்களை உடைப்போம்.

நன்றி! வணக்கம்!
 
லட்சக்கணக்கான தமிழக இளைஞர் காங்கிரஸ் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில்,
எஸ். கேசவன்



மின்னணு நகல்:

தமிழக காங்கிரஸ் மக்களவை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
திமுக மக்களவை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழக பத்திரிகை நண்பர்கள்
தமிழ் சார்புள்ள இணைய தளங்கள்
தமிழக கல்லுரி மாணவர்கள்

பின்குறிப்பு:

இத்துடன் மின் வெட்டுக்கு டிவி பிரத்யேக பேட்டியில் மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணி அரசை குறை சொன்னதற்கு சில கேள்விகளை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். அதன் மின்னணு நகல் தமிழ்நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டது. அதற்க்கு அவர்களின் அளித்த பதில்களின் தொகுப்பை இணைத்துள்ளோம். 500 மின்னனு அஞ்சலுக்கு 7 பதில்கள் கிடைத்தது எங்களுக்கு வெற்றிதான்.
 
" ஜெயலலிதாவுக்கு கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி நடத்தவும் தெரியாது. அதிமுக நடத்தும் நமது எம்.ஜி.ஆர் இணையதளம் பிச்சைகாரன் வாந்தி எடுத்தது போல் உள்ளது. இவர்களிடம் என்ன நல்ல ஆட்சியை எதிர்பார்க்க முடியும்? " - ஆர். முருகன், வேலூர்
" பரவயில்லையே, இளைஞர் காங்கிரஸ் ஆளுங்கட்சியை சரியான கேள்விகளை கேட்கிறது. சபாஷ் " - வி. பாண்டியன், நெல்லை
" அம்மா தப்பி தவறி தேசிய அரசியலுக்கு போனால், ஓ. பன்னீர் செல்வம் தான் முதல்வராம். ஓ.பி.எஸ் முதல்வரானால் 12  மணி நேர கரண்ட் கட் 24 மணி நேர கரண்ட் கட் ஆகும். இந்த ஒரு காரனத்துக்கே அதிமுகவுக்கு ஓட்டு இல்லை. இந்தம்மா அதிகாரிகளை மிரட்டி கொஞ்சம் வேலை வாங்குது. ஓ.பி.எஸ் முதல்வரானால் சர்வ நாசம் " - கே.வி. சக்திவேல், திருப்பூர்
" ஜெயலலிதா இலவச அரிசி கொடுக்கிறார். இலவச மளிகை கொடுக்கிறார். இலவச கிரைண்டர், மிக்சி கொடுக்கிறார். பேசாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து விட்டு போலாமே. அரசாங்கத்துக்கு செலவு மிஞ்சும் " - எஸ். பிரியா, சமயபுரம், திருச்சி
" Congress for centre and DMK for State is the better choice. DMK rule was better. We had power cut only for 2 hours " - PM Kannan, Chrompet, Chennai
இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியல, புரியல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே எல்லாம் தரித்திரம்தான் " - என். அழகப்பன், காரைக்குடி
" This government did nothing. Jobs are moving to other States like Gujarat" - S Manoharan, Coimbatore Institute of Technology, Kovai
" ஆறாவது பெயில் ஆனவர் ஐ.டி. மினிஸ்டர். அப்புறம் எப்படி இந்த அரசாங்கம் உருப்படும்?" - டி. பூர்விகா, துரைப்பாக்கம், சென்னை
" I do not understand politics, but Jayalalithaa govt is anti-people administration. Youths like you should spread the message to youngsters to protest against this govt." - R. Kavitha, Ethiraj college Student, Chennai

3 comments:

  1. congresskaranukku rosham vandhathupol ennikku
    poyaes gardenin kathavu eppa thirakkum arivaalayam
    kathavu eppo thirakkum kaathukittuirukkira janangalukku rosham varum.

    ReplyDelete
  2. ஜெயலலிதா இலவச அரிசி கொடுக்கிறார். இலவச மளிகை கொடுக்கிறார். இலவச கிரைண்டர், மிக்சி கொடுக்கிறார். பேசாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து விட்டு போலாமே. அரசாங்கத்துக்கு செலவு மிஞ்சும் " - எஸ். பிரியா, ----- இந்த கமெண்ட் சூப்பர்

    ReplyDelete
  3. SEVEN PERSONS RESPONDED FOR THIS LETTER. I DOUBT THEY ARE THE ONLY MEMBERS IN YOUTH CONGRESS.

    ReplyDelete