Thursday, October 25, 2012

கல்கியில் கவிதையும் விசாரணைக் கமிஷனும்

முதல் கவிதை

மதுரையில் கல்லூரியில் படித்த காலம், சென்னைப்
பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ தேர்விற்குக் கடைசி
நிமிடத்தில் பணம் கட்டி ஹால் டிக்கெட் எப்போது
வரும் என்று தவிப்போடு ஒவ்வொரு நாளும்
காத்திருந்த      நேரம்  அது.  

அந்தத் தேர்வின் மூலமாகவே
சென்னைப்பட்டினத்தை முதல் முறையாக பார்க்கத்
துடித்த பட்டிக்காட்டு மனோபாவத்தில் இருந்த
அந்த நாளில் கவிதை ஒன்று தோன்றியது.

ஞாயிற்றுக் கிழமை

வழிதோறும் விழிவைத்து
வராத கடிதத்திற்கு
ஏங்கி விடும்
ஏக்கப் பெருமூச்சு
இல்லாத ஒரே நாள்

கல்கியில் மாணவர் பக்கத்தில் பிரசுரித்து பத்து ரூபாய்
 பணம் வேறு அனுப்பி விட்டார்கள். அதுதான் எனது
முதல் வருமானம்.

 ஆனால் ஒரு

 வில்லங்கமும் கூடவே வந்து சேர்ந்து விட்டது. கவிதைக்குப்
 பக்கத்தில் ஒரு பெண்ணின் நெடிய கண்களின் படத்தினை
 வேறு போட்டு விட்டார்கள். 

ஆகவே நான் எப்படிப்பட்ட
 கடிதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வி,
வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி வந்து விட்டது.

 ஒரு விசாரணைக் கமிஷனே நடந்து விட்டது. 

அதற்குப் பிறகு ரொம்ப வருடங்கள் கவிதைகள்
பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை.

அந்த முதல் சென்னை அனுபவம் இருக்கிறதே,
அதையே ஒரு தனி பதிவாக எழுத வேண்டும்.

No comments:

Post a Comment