Monday, March 14, 2022

சாவர்க்கரின் சிஷ்யை ஒரு பிக்பாக்கெட்

 


ரூபா தத்தா ஒரு பெங்காலி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை. சங்கிகளின் ஒரு ரௌடிகள் பிரிவான கர்னி சேனாவின் மேற்கு வங்கத் தலைவரும் கூட. 

அவர் பெயர் நேற்று எல்லா ஊடகங்களிலும் அடிபட்டது.

ஏன்?

கொல்கத்தாவில் நடைபெற்று வருகிற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அவர் பிக்பாக்கெட் அடித்த போது சிக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு பையை அவர் குப்பைத் தொட்டியில் வீசியெறிய காவலர்கள் அதை பார்த்துள்ளார்கள். அந்த பைக்குள்ளாக ஏராளமான பர்ஸ்கள். இதற்கு அவரால் விளக்கம் சொல்ல முடியாத காரணத்தால் கைது செய்யப் பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிணையும் மறுக்கப்பட்டு விட்டது.

சாவர்க்கரை வணங்குபவருக்கு அவர் பாணியில் மன்னிப்பு கேட்டு தப்பிக்கத் தெரியாதா என்ன?



மன்னிப்பு கொடுக்கத்தான் மேற்கு வங்க ஆட்டுத்தாடியும் கூடவே இருக்கிறாரே!



1 comment:

  1. ஊருக்கு ஊர் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது அங்கே ஆட்டுத்தாடி, இங்கே மாட்டுத்தாவணி (மதுரை)!

    ReplyDelete