Thursday, March 31, 2022

ஜட்ஜய்யா ரொம்பவே நல்லவரா ?

 


காலையில ஒரு செய்தியை படிச்சுட்டு கபகபன்னு சிரிச்சுட்டேன். சுப்ரீம் கோர்ட் ஜட்ஜய்யா மொட்டைச்சாமியார் மாநில வழக்கறிஞரைப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி, அதுதான் சிரிப்புக்குக் காரணம்.

போராடிய விவசாயிகளை மோடியோட அயோக்கிய மந்திரி ஒத்தனோட அயோக்கிய மகன் காரேத்தி கொன்னது ஞாபகம் இருக்கில்ல! 

அந்த அயோக்கிய சிகாமணிக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துருச்சு, செத்துப் போனவங்களோட சொந்தக்காரங்க, அந்த ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்ட்டாங்க.

அப்போதான் நம்ம ஜட்ஜய்யா "ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி உபி மாநில அரசு ஏன்யா மேல் முறையீடு செய்யலை/" ன்னு கேட்டாரு.

இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே ஜட்ஜய்யா! கொலைகாரன், கொலைகாரனோட அப்பன், கொலைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தவன். கொலை நடக்க ஆசி கொடுத்தவன், வேடிக்கை பாத்து சந்தோஷப் பட்டவன் அம்புட்டு பேரும் ஒரே கட்சி. அவன் எப்படி ஜட்ஜய்யா அப்பீல் செய்வான்?

ரொம்ப நல்லவரா கேள்வி கேட்காம, மனிதன் படத்து ராதாரவி மாதிரி பேப்பர் வெயிட்டை தூக்கி போடுங்க. அப்போவாவது கோர்ட் மேல அந்த அயோக்கியக் கூட்டத்துக்கு பயம் வருதா பாப்போம். 

No comments:

Post a Comment